இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100 ☐ கனிச்சாறு - நான்காம் தொகுதி
69
உடல்நலத்தைக் காவாதான்,
உயிர்நலத்தைக் காவாதான்!
உடல்நலத்தைக் காவாதான்,
உயிர்நலத்தைக் காவாதான்!
உயிரைச் சார்ந்த
உளவுணர்வும் அறிவுணர்வும்
ஒருங்கே காத்துத்
திடமுடனாய் இருப்பவனே
எச்செயலும் திறமையுடன்
செய்ய வல்லான்!
தீங்கின்றி மக்களுக்கும்
உழைக்க வல்லான்!
குடம்,ஒழுக்காய் இருப்பதனால்
ஊற்றுகின்ற நீர்நிலையாய்
இராத தைப்போல்,
குன்றினைப்போல் சேர்த்துவைத்த
அறிவும் வாழ்வும்,
முடமாகிப் போகுமன்றோ?
முழுப்பயனும் இல்லாமல்
முழுகும் அன்றோ?
மூவறமும் உடல்நலத்தில்
முகிழ்க்கும் அன்றோ?
-1985