பக்கம்:கனிச்சாறு 4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108  கனிச்சாறு - நான்காம் தொகுதி


76

பாட்டெழுதத் தெரிந்தால் போதாது தம்பி !


பாட்டெழுதத் தெரிந்தால்,போ
தாது, தம்பி!
பயனுடைய பாட்டாக
எழுதல் வேண்டும்!
பூட்டறுக்கும் பாட்டுக்குத்
தேவை என்றால்,
பூப்பாட்டும் புனல்பாட்டும்
யார்க்கு வேண்டும்?

நாட்டுக்கும் மக்களுக்கும்
நலிவைப் போக்கும்
நல்லுரிமைப் போராட்டக்
காலத் தில்போய்க்
கூட்டுக்கும் குயிலுக்கும்
இலக்கி யங்கள்
குவிக்கின்ற பழக்கங்கள்
உணர்வைத் தீய்க்கும்!

இயற்கைக்கும் வாழ்க்கைக்கும்
இலக்கி யத்தை
எருவாக்கும் முயற்சியெலாம்
தமிழர் வாழ்வைச்
செயற்கைக்கும் அடிமைக்கும்
சமயத் திற்கும்
சீரழிக்கும் பகைமைக்கும்
சாதி மைக்கும்

மயற்கைக்கும் போலிமைக்கும்
கொண்டு சேர்த்த
மாக்கதைகள் பலகோடி!
உரிமை மீட்கும்
புயற்கைக்(கு)இங்(கு) உணர்வேற்றி
எரிம லைக்கே
புத்துயிரை ஊட்டுகின்ற
பாட்டே வேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/143&oldid=1440812" இலிருந்து மீள்விக்கப்பட்டது