பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 161
அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாமெனும்
உரையிற் பராவிடும் உண்மைத் தமிழர் தம்
60
அறமும் உண்டுகொல்! அறமும் உண்டுகொல்!
தெய்வமும் உண்மை கொல்! தெய்வமும் உண்மை கொல்!
செய்தவத் தோர்தாம் செப்பிய மாத்திறன்-
மெய்யறி வோருளம் மொய்த்திடு பேரிறை-
கையற் றார்தமைக் காத்திடுங் கடிகா-
65
செய்வினைக் குறுதுணை
செயும்பே ராற்றல்-
இடர்ப்படு வார்தமை எற்றும்,ஏ மப்புணை-
சுடரொளி-அருட் கடல்-
சூழ்ந்த பரம் பொருள்-
பொய்ம் மையும் புன்மையும் போழ்க்குமென் றுரைத்த
தெய்வமும் உண்மைகொல்!
தெய்வமும் உண்மைகொல்!
70
108
ஊரைத் திருத்துமுன்... !
ஊரைத் திருத்துமுன், உலகைத் திருத்துமுன்
உன்னைத் திருத்தடா தமிழா-நீ
உன்னைத் திருத்தடா தமிழா!
பாரைத் திருத்திடல் நல்ல முயற்சியே!
பாட்டனும் பூட்டனும் செய்த பயிற்சியே!
யாரைத் திருத்தினர்; யாது வளர்ச்சியே?
யாங்கணும் யாங்கணும் வாழ்க்கை தளர்ச்சியே!
(ஊரைத்)