பக்கம்:கனிச்சாறு 4.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 177


119

பொதுமை வரட்டும் !


ஓங்கட்டும் கைகள்;
ஒலிக்கட்டும் வன் முழக்கம்;
நீங்கட்டும் அடிமை நிலை,
இந்நிலத்திலே! - இனி
நிலைக்கட்டும் பொதுவுணர்வு
நம் உளத்திலே!

நடக்கட்டும் கால்கள்;
நடுங்கட்டும் ஆட்சியினர்;
வடக்கெட்டும் முழக்கங்கள்
வலிமை வரட்டும்!-இனி
வரையட்டும் புதுக்கொள்கை;
வாழ்க்கை தரட்டும்!

கேட்கட்டும் உரிமைஒலி;
கிளரட்டும் வல்லுணர்வு;
ஏற்கட்டும் சூளுரைகள்;
இளைஞர் எழட்டும்! - இனி
எழுதட்டும் பொதுவுரிமை;
எழுச்சி பெறட்டும்!

திரளட்டும் மக்கள்குலம்;
தெளியட்டும் கொள்கை நலம்;
மிரளட்டும் ஆளவந்தார்;
மீட்சி தரட்டும்! - இனி,
மேலுமில்லை; கீழுமில்லை;
பொதுமை வரட்டும்!

-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/212&oldid=1444517" இலிருந்து மீள்விக்கப்பட்டது