இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 197
140
விண்வரை புகழ்கொள் !
நீ, விரும் பாமல், உன்
பிறவி நிகழ்ந்தது!
நீ, விரும் பாமல், உன்
இறுதியும் நிகழும்!
இடையில் உன் வாழ்க்கை!
எவரும் மதிக்கவும்,
கடைசி வரை உனைக்
கருதவும் நிலை பெறு!
வியன் பிறர் கொள்ளவும்
விரும்பவும் நடந்து கொள்!
பயனுடை வாழ்வாய்ப்
பண்ணிக் கொள்க, நீ!
உனக்கு வாழ் வதினும்
உலகுக்கு நீ, வாழ்!
மனக்குறை வின்றி
மக்கட்குத் தொண்டு செய்!
உன் அறிவு பெரியது!
உள்ளமும் இனியது!
வன்மையது உடலும்!
அவற்றை வாழ வை!
காண்பவை அனைத்தும்
கனவென்று நீ, நினை!
வீண்பகை யின்றி
வெறுப்பின்றி நீ, இரு!
உன் மொழிக்கு நீ, உழை!
உழை, உன் இனத்துக்கு!
தின்பதும் உடுப்பதும்
திரிவதும் வாழ்வு இலை!
தலைவனாய் நீ வளர்!
தறுதலை ஆகாதே!
விலையிலை உனக்கு!
விண்வரை புகழ்கொள்!
-1991