பக்கம்:கனிச்சாறு 4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8  கனிச்சாறு – நான்காம் தொகுதி


பாழ்த்த நிலையும், பசியடங்கா வெற்றுணவும்,
ஆழ்த்தும் வறுமையும் அல்லால் தமிழ்நாட்டில்

பேச்சென்ன உண்டு? பிறவாமல் நீயிருந்தால்
மூச்சிறுக்கிச் சாவேனே! முன்வந்தோர் போலின்றிச்

சாதிச் செருக்கும் சமயப் பழியுரையும்
மோதிப் புரள்கின்ற மக்களிடை யேன்பிறந்தாய்?

நாடு சிதைந்ததடா! நம்பெருமை தாழ்ந்ததடா!
“பூடற்றுப் போனார் பழந்தமிழர்!” என்னுஞ்சொல்

கேட்கத்தான் வந்தாயோ? கீழ்மைத் திறமகற்றி
மீட்கத்தான் வந்தாயோ? மீனவனே ஏன்பிறந்தாய்?

-1956
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/43&oldid=1440215" இலிருந்து மீள்விக்கப்பட்டது