பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 37
கொம்பின்நுனி நீண்டாலென்ன?
கொத்துமலர் பூத்தாலென்ன?
வெம்பினைநீ பச்சைப்படு பிஞ்சில் - இனி
விளைந்திடுமோ அமைதியுன்றன் நெஞ்சில்!
பகுத்தறிவும் வாய்ந்தாலென்ன?
பல்பொருளும் ஆய்ந்தாலென்ன?
வகுத்தறியும் அறிவிழந்து நின்றாய், இருள்
வாழ்க்கையிலே உனைமறந்து சென்றாய்!
மிகவுயர்ந்த கட்டிடங்கள்!
மின்விளக்குத் தோரணங்கள்!
அகவுயர்ச்சி எனில், அடடா இல்லை! அவை
அத்தனையும் உனையழிக்கும் எல்லை!
22
மக்கள் என்று திருந்துவாரோ ?
பொன்னன் எனும்சிறு பையன் - நகர்ப்
பொத்தகக் கடைநோக்கிப் போயினன் ஓர்நாள்!
மின்னும் எழில்வண்ணத் தோடு - அட்டை
மேனி பளபளக் கும்கதை நூல்கள்,
கண்ணைப் பறித்திடு மாறு - பல
காட்சி தருகின்ற கன்னியர் தோற்றம்
விண்ணைப் பழித்திடும் போக்கில் - தம்
வெற்றுடல் காட்டிடுந் தாளிகைக் கூட்டம்.
கொட்டை எழுத்தினில் சூடாய் - செய்தி
கொடுத்திடும் இழிநடை நாட்கம்பித் தாள்கள்
அட்டை பெருத்திடும் நூல்கள் - துப்
பறிகின்ற புதினங்கள், பாலியல் நூல்கள்.
சட்டையின் பையளவுள்ள - பல
சாய்க்கடைக் குப்பைகள், பேய்க்கதை நூல்கள்,
அட்டைகள் போலக் கயிற்றில் - சுவர்
ஆணியில்,எங்கும் தொங்கின; மீதி,