76 ☐ கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி
84 தொழில்!
எத்தொழில் செய்யினும் மேன்மையென் றெண்ணு!
எவருன்னை வெறுத்தாலும் வருந்தாதே கண்ணு!
புத்தெழில் [1]ஓவம் கற்றாலும் - [2]கற்
படிமத்தில் உன்மனம் ஈடுபட்டாலும்,
பித்தளை இரும்பினைக் கொண்டு வேலை
புரிந்திட ஓராவல் உனக்கு வந்தாலும்
தச்சர் பணி புரிந்தாலும் - கொல்லர்
தட்டாரைப் போல் தொழில் செய்ய வந்தாலும்,
அச்சுத் தொழிலைக் கற்றாலும் - மற்ற
ஆலைத் தொழில்களை நாளுஞ் செய்தாலும்
வாணிகஞ் செய்ய வந்தாலும் - பல
வண்டிகள் ஏறி நீ ஓட்ட வந்தாலும்,
காணி நிலங்கள் உழுது மாடு
காளைகளோடு நீ வேலை செய்தாலும்
கடல்தனைத் தாண்ட வந்தாலும் - வான்
கப்பல் வழியாய்ப் பறக்க வந்தாலும்,
உடல் வருந்தி மலை யேறி - நீ
ஓயாது பணியாற்றும் நிலைக்கு வந்தாலும்
உறுதியை உள்ளத்திற் கொள்ளு அதற்
கொண்ணாத சோம்பலை உடனே நீ தள்ளு!
இறுதிவரை யுழைத்தாலும் மன
இடர்ப்பாடு நீக்கி உழைத்தலே மேலாம்!