பக்கம்:கனிச்சாறு 5.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  85


கயல்விழியீர்! கும்மி கொட்டுங்கடி! - உயிர்
காந்தத் தமிழ் என்று கொட்டுங்கடி! - நெஞ்ச
மயலறுத் துலகம் மலர்த்துவ தெங்கள்
மணித்தமிழே என்று கொட்டுங்கடி!

தாழ்குழலீர்! கும்மி கொட்டுங்கடி - இது
தனித்தமிழே எனக் கொட்டுங்கடி! - மாந்த
வாழ்வழி முற்றும் வகைபடக் கூறுதல்
வளர்தமிழே எனக் கொட்டுங்கடி!

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, - தமிழ்க்
கோதையரே கும்மி கொட்டுங்கடி! - நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் சுடர்
ஏற்றிடவே கும்மி கொட்டுங்கடி!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/119&oldid=1424934" இலிருந்து மீள்விக்கப்பட்டது