பக்கம்:கனிச்சாறு 5.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  131


132

தாத்தா பாருங்கள் தமிழ்ச்சிட்டு!


தாத்தா பாருங்கள் தமிழ்ச்சிட்டு!
தமிழ்மொழிக் கிதுவொரு மலர்த்தட்டு!
பார்த்தால் பக்கம் பதினாறு!
படித்தால் முழுவதும் தேனாறு!

சிறுகதை, பாட்டுகள் பலவுண்டு!
சிறுவர்க் கினித்திடும் கற்கண்டு!
குறுநடைக் குழந்தையும் பாடிடலாம்!
கூனற் கிழவியும் ஆடிடலாம்!

கட்டுரை, துணுக்குகள் மணம் கொழிக்கும்!
கருத்தால் நடையால் மனம் செழிக்கும்!
தெட்டுரை தீதுரை இருக்காது!
தெளிவுரை உண்டு;(உ)ளம் வெறுக்காது!

அறிவியல் வாழ்வியல் செய்திதரும்!
அவற்றைப் படித்தால் அறிவுவரும்!
நெறிதரும் வாழ்க்கை வழிகாட்டும்!
நீங்கா இன்பம் எழில்கூட்டும்!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/165&oldid=1444915" இலிருந்து மீள்விக்கப்பட்டது