பக்கம்:கனிச்சாறு 5.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


133

தமிழ்நாட்டில் பொதுமை நலம்
தழைத்திடச் செய்வோமே!


தமிழ்ச்சிட்டுக் குழந்தைகளே!
உமக்கொன்று சொல்வேன்;
தமிழ்த்தேசம் நம்தேசம்!
தமிழ்மக்கள் நாமே!

தமிழர்கள்நாம் ஒற்றுமையை
மறந்துவிட்ட தாலே,
தமிழ், இனம், நா(டு) அத்தனையும்
தாழ்ந்தடிமைப் பட்டோம்!

தமிழ்விளைவைத் தம்விளைவாய்த்
தமிழ்ப்பகைவர் கொண்டார்!
தமிழ்நலிவை உண்டாக்கித்
தமிழ்வரலா றழித்தார்!

தமிழ்மொழியைத் தமிழினத்தை
நாம்மீட்க வேண்டும்!
தமிழ்நாட்டைத் தனிநாடாய்
நாம்சமைக்க வேண்டும்!

தமிழ்மொழியைப் பேணுங்கள்!
தமிழ்மொழிபே சுங்கள்!
தமிழ்மொழியில் பிறமொழியைக்
கலந்துரையா தீர்கள்!

தமிழரெனச் சொல்லுங்கள்!
தவிர்த்திடுங்கள் சாதி!
தமிழ்நாட்டில் பொதுமைநலம்
தழைத்திடச்செய் வோமே!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/166&oldid=1444919" இலிருந்து மீள்விக்கப்பட்டது