பக்கம்:கனிச்சாறு 5.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  137


138

நீந்திப் பழகு!


கோடை வெயிலில் குளத்தில் விழுந்து
குளித்து மகிழ்க தம்பி - உடல்
வாடி டாமல் ஊக்கம் பிறக்கும்;
வளர்ந்து நீளும் தம்பி!

மூச்சைப் பிடித்து நீருக் குள்ளே
முங்கி முங்கி எழுவாய்! - நாளும்
நீச்சுப் பழக்கம் நாடி நரம்பை
நீட்டி முறுக்கும் அறிவாய்!

தொடைகள் இறுகும்; மார்பு விரியும்;
தோன்றும் உறுதி காலில்! - உடல்
எடையும் குறையும்; எழிலும் பெருகும்!
இரைப்பை வலிவு கூடும்!

குளத்தில் நீந்து; கடலில் நீந்து;
குடலும் வன்மை யாகும்! - தம்பி
உளத்தில் தோன்றும் உவகை யெல்லாம்
உடலில் பொங்கி வழியும்!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/171&oldid=1444947" இலிருந்து மீள்விக்கப்பட்டது