பக்கம்:கனிச்சாறு 5.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  155


159

நீயும் பிறரும்!


பிறரைப் புகழ்கையில்
உனைத்தாழ்த் தாதே!
பிறரை ஆய்கையில்
உன்னையும் எடையிடு!
பிறரைப் பணிக்கையில்
நீயும் பணிபுரி!
பிறரை மகிழ்வுசெய்;
நீயும் மகிழ்ந்துகொள்!

-1969
 

160

உருவைப் பார்த்து வரை!


உருவைப் பார்த்து வரை! - பின்
உளத்தைப் பார்த்து நட!
மருவில் லாத வாழ்க்கை - என
வாழ்ந்த மக்கள் பெரியோர்!

உயர்வைக் கண்டு பழகு! - தூய
உள்ளம் உண்மை அழகு!
அயர்வு கொள்ளல் தாழ்ச்சி - மெய்
அன்பில் லாமை வீழ்ச்சி!

அறிவில் மிக்க பெரியோர் - நல்
ஆக்கம் செய்த மேலோர்
நெறியில் போதல் மகிழ்ச்சி! - தீய
நேயர் தொடர்பு இகழ்ச்சி!

-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/189&oldid=1444964" இலிருந்து மீள்விக்கப்பட்டது