பக்கம்:கனிச்சாறு 5.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  165


172

பூப்பதெல்லாம் காய்ப்பதில்லை!


கண்டன வெல்லாம்
கற்றிடத் தோன்றும்;
காலமும் நேரமும் போதாவே!
உண்டன வெல்லாம்
செரித்திடும் என்றால்
உடம்பும் வயிறும் கொள்ளாவே!

நினைப்பன வெல்லாம்
நிகழ்த்துவ தென்றால்
நிலமும் வானும் என்னாகும்?
சினைப்பன வெல்லாம்
சிறப்பன வென்றால்
செடிகொடி மரங்கள் மண்ணாகும்!

பூப்பன வெல்லாம்
காய்ப்பன வென்றால்
புதுப்புது விளைவுக்கு நிலமேது?
வாய்ப்பன வற்றுள்
வளர்வன கொண்டு
வாழ்ந்திட விலையெனில் நலமேது?

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/199&oldid=1444976" இலிருந்து மீள்விக்கப்பட்டது