பக்கம்:கனிச்சாறு 5.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  5


3  வீடு!

குடி இருக்க வீடு
கூரை மேலே ஓடு!

படிப்ப தற்கோர் அறை;
படுத்துத் தூங்க ஒன்று!

சமையல் செய்ய ஒன்று;
தட்டு முட்டுக் கொன்று!

குளிப்ப தற்கோர் அறை;
கூடிப் பேச முற்றம்!

தூய்மைக் காற்று வீசும்,
தோட்டம் ஒன்றும் உண்டு!

நோய்கள் வந்த தில்லை;
நொடிகள் வந்த தில்லை!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/39&oldid=1424520" இலிருந்து மீள்விக்கப்பட்டது