பக்கம்:கனிச்சாறு 5.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  9


8  அம்மா!

அம்மா மிகவும் நல்லவள்!
ஆட்டித் தூங்கச் செய்தவள்!

இளைக்கக் கண்டு அழுதவள்!
ஈயை ஓட்டி நின்றவள்!

உழக்கு நெய்யைச் சோற்றிலே
ஊற்றிப் பிசைந்து கொடுத்தவள்!

எடுத்துத் தூக்கி அணைத்தவள்!
ஏணை கட்டிப் போட்டவள்!

ஐயன் அப்பன் என்றவள்!
ஒளவைக் கதையைச் சொன்னவள்!

ஒப்ப னைகள் செய்தவள்!
ஓயா தென்னை காப்பவள்!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/43&oldid=1424835" இலிருந்து மீள்விக்கப்பட்டது