பக்கம்:கனிச்சாறு 5.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


11  சேவல்!

காலையிலே கண் விழிப்பாய் சேவலே! - நீ
கதிரவனை நின்றழைப்பாய் சேவலே!
வேலை யிதோ எந்தநாளும் சேவலே?- நீ
வேறு வேலை என்ன செய்வாய் சேவலே?

குப்பை மேட்டில் ஏறி நின்று சேவலே! - நீ
கொக்கரக்கோ கொக்கரக்கோ என்கிறாய்!
செப்பு வதற் கென்ன பொருள் சேவலே! - வந்து
சேர்ந்த இன்பம் என்ன கண்டாய் சேவலே!

அரும் பரும்பாய் அழகு மிக்க கொண்டையும் - கூர்
ஆணி போல வன்மை சேர்ந்த மூக்கையும்,
திரும்பு கையில் ஆடுகின்ற தாடியும் - எங்குத்
தேடிப் பெற்றாய் என்று சொல்வாய் சேவலே!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/46&oldid=1424838" இலிருந்து மீள்விக்கப்பட்டது