பக்கம்:கனிச்சாறு 5.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


13  வீட்டைக் கட்டினான்!

மண்ணைப் பிசைந்தான்;
கல்லை உடைத்தான்;
'மள மள'வென்றே சுவர் வைத்தான்!

திண்ணை அமைத்தான்;
படிகள் வைத்தான்;
தண்ணீர்த் தொட்டி ஒன்றமைத்தான்!

மரத்தைப் பிளந்தான்!
பலகை அறுத்தான்!
'மழ மழ'வென்றே அதை இழைத்தான்!

அரத்தைக் கொண்டும்,
ஆணிகள் கொண்டும்
அழகுக் கதவுகள் பல செய்தான்!

கம்பியை வளைத்தான்;
பலகணி செய்தான்!
கட்டி முடித்தான் ஒரு வீட்டை!

தம்பியும் மகிழ்ந்தான்!
தங்கையும் மகிழ்ந்தாள்!
தாயும் தந்தையும் மகிழ்ந்தனரே!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/48&oldid=1424840" இலிருந்து மீள்விக்கப்பட்டது