இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18 ☐ கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி
17 மயில்!
ஒற்றைக் காலைத் தூக்கி ஆடும்
வண்ண மயிலே! - உன்
உடல் முழுதும் கண்கள் ஏனோ?
வண்ண மயிலே!
சுற்றும் முற்றும் பார்ப்ப தேனோ
வண்ண மயிலே! - உன்
சின்னக் கொண்டை ஆட்டு தற்கோ,
வண்ண மயிலே?
தொங்குந் தோகை விரிப்ப தென்னே,
வண்ண மயிலே? - இன்பம்
தோன்று வதைக் காட்டத் தானோ
வண்ண மயிலே?
கங்குல் வான முகிலைக் கண்டு
வண்ண மயிலே! - நீ
காலைத் தூக்கி ஆடு வதேன்?
வண்ண மயிலே!
நெட்டைக் காலும் நீள் கழுத்தும்
வண்ண மயிலே! - நீ
நீட்டி நீட்டி நடந்தால் இன்பம்
வண்ண மயிலே!
முட்டை யிட்டோ குஞ்சு பொரிப்பாய்
வண்ண மயிலே! - உன்
முழவுக் குரலால் அகவல் செய்வாய்
வண்ண மயிலே!