பக்கம்:கனிச்சாறு 5.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  19


பச்சை நீலம் மஞ்சள் சிவப்பு
வண்ண மயிலே - ஒளி
பளபளக்கும் பட்டுடலாம்
வண்ண மயிலே!

குச்சிகள் போல் நீலக் கொண்டை
வண்ண மயிலே - நீ
குலுக்குகையில் கோடி இன்பம்!
வண்ண மயிலே!

-1968


18  உதவாதவை!

எருதில் லாத மொட்டை வண்டி
ஏறிச் செல்ல உதவாது!
எருவில் லாத வெறுமை நிலமோ
எதுவும் விதைக்க உதவாது!

வெட்டு கின்ற கிணற்றுத் தண்ணீர்
வேகும் வீட்டிற் குதவாது!
கொட்டு கின்ற மழையோ என்றும்
குளித்துக் கொள்ள உதவாது!

கரையில் லாத ஏரித் தண்ணீர்
கழனிக் கென்றும் உதவாது!
உரையில் லாத செய்யுள் நூலோ
உணரார்க் கென்றும் உதவாது!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/53&oldid=1424845" இலிருந்து மீள்விக்கப்பட்டது