பக்கம்:கனிச்சாறு 5.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


51  அம்மா! பிடித்துக்கொள்!

அம்மா! என்னைப்
பிடித்துக் கொள்!
அழகாய் நடப்பேன்
பிடித்துக் கொள்!
சும்மா திரும்பிப்
பார்க்காதே!
சுட்டு விரலை
மடக்காதே!

விரலைப் பிடித்தே
நடந்திடு வேன்!
விரைவாய்க் காலை
வைத்திடுவேன்!
குரலை மட்டும்
தாழ்த்தாதே!
குடுகுடு வென்றே
வருவேன், நான்!

மண்ணில் நடந்தும்
நான்வரு வேன்!
மாடிப் படியும்
ஏறிடுவேன்!
கண்ணில் எனக்கும்
ஒளியுண்டு!
காலில் எனக்கும்
வலிவுண்டு!

கையை வீசி
நடந்திடுவேன்!
கடைக்குக் கூடப்
போய் வருவேன்!
பையைத் தோளில்
மாட்டி விடு!
பழங்கள் மட்டும்
தந்து விடு!

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/80&oldid=1424820" இலிருந்து மீள்விக்கப்பட்டது