பக்கம்:கனிச்சாறு 5.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  57


64  மிதமாய் உண்பது
மிகுதியும் இன்பமே!

பயற்றங்காய்க் குழம்பு
பசிக்குமேல் உண்டேன்!
வயிற்றை வலித்தது
வாந்தியும் வந்தது!

மருத்துவர் வந்தார்
மருந்துகள் தந்தார்
பருத்த வயிறும்
பள்ளமாய்க் கழிந்தது!

அதிகமாய் உண்பதே
அனைவர்க்குந் துன்பம்!
மிதமாய் உண்பது
மிகுதியும் இன்மே!

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/91&oldid=1424834" இலிருந்து மீள்விக்கப்பட்டது