இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 57
64
மிதமாய் உண்பது
மிகுதியும் இன்பமே!
பயற்றங்காய்க் குழம்பு
பசிக்குமேல் உண்டேன்!
வயிற்றை வலித்தது
வாந்தியும் வந்தது!
மருத்துவர் வந்தார்
மருந்துகள் தந்தார்
பருத்த வயிறும்
பள்ளமாய்க் கழிந்தது!
அதிகமாய் உண்பதே
அனைவர்க்குந் துன்பம்!
மிதமாய் உண்பது
மிகுதியும் இன்மே!
-1982