இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
108 ☐ கனிச்சாறு - ஏழாம் தொகுதி
81
பாவேந்தர் பாரதிதாசன்!
பாட்டுக்கு வேந்தர்
பாவேந்தர் - அவர்
பாரதிதாசன்
எனும் வேந்தர் தம்பி
ஏட்டுக்கு ஏடு
எழில்கொழிக்கும் - அவர்
எழுத்துக்கு எழுத்து
தமிழ் மணக்கும்!
(பாட்டுக்கு)
கூட்டுக்குள் ஆவி
தமிழ்என்றார் - அவர்
குரலுக்குக் குரலால்
நமை வென்றார் -நம்
வீட்டுக்கு வீடு
அவர் பாடல் - பெரும்
வீதிக்கு வீதி
அவர் புகழாம்!
(பாட்டுக்கு)
நரம்புக்கு நரம்பு
உணர்வேறும் - உயிர்
நாடிக்கு நாடி
தமிழ் ஊறும்!
கரம்புக்கு உழவாய்
மனம் உழுதார் - நல்ல
கழனிக்கு மழையாய்த்
தமிழ் பொழிந்தார்!
(பாட்டுக்கு)
இருளுக்கு ஒளியாய்
அவர் திகழ்ந்தார் - நல்ல
இயற்கைக்கு உயிராய்
எழில் கொடுத்தார்!
மருளுக்கு மருந்தாய்த்
தமிழ் விளைத்தார் - தம்பி!
மடமைக்கு எதிராய்ப்
போர் தொடுத்தார்!
(பாட்டுக்கு)
-1970