பக்கம்:கனிச்சாறு 7.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


இளையோர்க்கும் வளையோர்க்கும் இனியவுரை
பலவெழுதிப் பேசி என்றும்
சளையாமல் தொண்டாற்றித் தனையுலகுக்
கொப்புவித்த இறைமை நெஞ்சன்!
வளையாமல் வெறிதுண்ணுஞ் செல்வர்களின்
தேட்டையெலாம் வறியோர் என்னும்
கிளையார்க்கே பொதுவுடைமை செயல்வேண்டும்
என்றுரைத்த கேண்மை யாளன்! 9

திரு.வி.க. வெனும்பெயரில் திருவிருக்கும்!
தமிழிருக்கும்! இனமி ருக்கும்!
திரு.வி.க. வெனும்பெயரால் திருவாரூர்ப்
பெயரிருக்கும். இந்த நாட்டில்
திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர்
இயக்கங்கள் செறிவுற் றோங்கும்!
திரு.வி.க. வெனும்பெயரால் பொதுச்சமயம்
சீர்த்திருத்தம் திகழும் இங்கே! 10

-1973

 


88

பாவாணர்!



தமிழ்க்கெனப் பிறந்து தமிழ்க்கென வளர்ந்து
தமிழ்க்கெனப் பயின்று தமிழ்க்கெனப் பயிற்றித்
தமிழ்க்கென ஓய்ந்து தமிழ்க்கென ஆய்ந்து
தமிழ்க்கென வாழுந் தமிழே வாழி!

-1973
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/167&oldid=1446232" இலிருந்து மீள்விக்கப்பட்டது