பக்கம்:கனிச்சாறு 7.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  135


98

திருமலை முத்துச்சாமி வாழ்க!


திருமலை முத்துச் சாமி
தேர்ந்தநூல் பலவும் கற்றுப்
பெருமலை யாக நிற்கும்
பேரறி வாளர்! அன்னார்க்
கொருநூற்றில் பாதியாண்டிங்
குவகையின் கழிந்த தென்னும்
பெருமைநாள் அறிஞர்க் கெல்லாம்
பெருவிழாத் திருநாள் அன்றோ?

நுண்ணிய பன்னூற் கல்வி
நுழைபுலம் மிகுந்தாரேனும்
திண்ணிய துறையால் நூல
கத்துறை தெரிந்து தேறி
எண்ணிலாப் பெருமை பெற்றும்
இனியநூற் பலவுஞ் செய்தும்
நண்ணிய புகழால் இந்நாள்
தமிழர்க்கே நன்னாள் அன்றோ?

தீந்தமிழ் பரப்பி வாழும்
திருமலை முத்துச் சாமி
ஈந்தநூல் பெருமை இங்கே
இலங்குதல் போல்என் றென்றும்
ஏந்தலாய்த் திருவி னோடும்
இணையிலா மகிழ்வி னோடும்
போந்தநாள் மேலும் வாணாள்
பொலிந்திட வாழ்க! வாழ்க!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/180&oldid=1446255" இலிருந்து மீள்விக்கப்பட்டது