இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
198 ☐ கனிச்சாறு - ஏழாம் தொகுதி
156
அரசிறைவன் - கதிர்மதி.
அன்னைத் தமிழ்க்கும் அருந்தமிழ்நன் னாட்டுக்கும்
தன்னைக் கொடுத்த தனித்தமிழன்! - என்னை
மனங்கொண்டு, யான்செய்யும் மாசற்ற தொண்டின்
இனங்கண்டு பாங்கிருக்கும் ஏந்தல்! - முனங்கொண்ட
பீடழிக்கும் ஆரியத்தைப் பேதலிக்கச் செய்ததனின்
கூடழிக்கும் கொள்கைக் குணக்குன்று! - பாடழியா
ஆண்மை வினையன் அரசிறைவன்; அன்னவற்கும்
காண்பரிய செல்வி கதிர்மதிக்கும் - மாண்புநிறை
நல்லோர் மனமகிழ, நட்டோர் உளங்களிக்க
எல்லோரும் வந்தே இணைவாழ்த்த - சொல்லார்க்கும்
மன்றல் நனிநிகழ்ந்து மல்கியதே பேரின்பம்!
குன்றல் இலாது குலந்தழைக்க! - என்றென்றும்
தாய்த்தமிழ்க்குத் தொண்டுசெய்து
தண்டமிழ்நா டோங்கிடவே
வாய்த்தமிழ்தாய் ஈங்கிருக்க வாழ்ந்து!
-1974