பக்கம்:கனிச்சாறு 7.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  201


159

புலவர் சிவசண்முகம் - செல்வி கலாவதி.


வெப்புமனம் வினைக் கோணல் விரகுநிறைந் தெங்கும்
வீணர்களே பெருகிவரும் துயர்மிகுமிந் நாளில்
எப்பொழுதும் தமிழ்நினைக்கும் இனியதிரு வுள்ளம்
எந்தமிழர் நலங்கருதும் தொண்டுணர்வு கொண்ட
ஒப்பரிய சிவசண் முகப்புலவர் என்பார்
ஒண்டொடியாம் கலாவதியை மணக்கின்ற போழ்தும்
செப்பரிய தமிழ்த்தொண்டாய் நூறாசி ரியமென்
செந்தமிழ்நூல் வெளியிட்டுப் பெரும்பெருமை கொண்டார்!

அன்னவர்தம் உளம் வாழ்க! தமிழ்நினைவு வாழ்க!
ஆற்றுகின்ற இல்லறமும் நலம்நிறைந்து வாழ்க!
பொன்னலமும் புகழ்நலமும் ஒருங்குவந்து சேர்ந்து
பொதுநலமும் நனிவாழ்க! பொலிக அவர் தொண்டு!
சொன்னலமும் பொருள்நலமும் புலநலமும் பெற்றுச்
சோர்வின்றி ஒளிமல்கும் அறிவுநலம் வாய்ந்து
பன்னலமும் அவர்பெறுக! பல்குகபே ரின்பம்!
பைந்தமிழ்போல் புலவரவர் தமிழ்க்குடும்பம் வாழி!

-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/246&oldid=1447119" இலிருந்து மீள்விக்கப்பட்டது