இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 207
165
மல்லிகை மதிப்புரை!
(‘மல்லிகை’ என்ற கையெழுத்து இதழுக்கு)
பூக்களைக் கண்டால் உள்ளம்
பூரிக்கும்; அதினும் வெள்ளைப்
பூக்களோ நம்மைக் கண்டு
புன்னகை செய்யும்; வெள்ளைப்
பூக்களில் மல்லி கையே
பொலி வதாம்; ஆனால் மல்லிப்
பூக்களோ வாடிப் போகும்
போகாதிம் மல்லிகைப் பூ!
.... மணத்தி னோடே
.... பூக்கள் மதுவைத் தேக்கும்!
.... இனிமைத் தேனோ!
.... வண்டு நக்கத் தீரும்!
.... பூக்கள் தேனைத்தந்து
.... பொலிவினையிழக்கும்! ஆனால்
.... கண்போல் உன்றன் நீரா
டும் மலர்
கனித் தமிழ் நாடு பண்டைக்
கன்னிநா டாகவேண் டின்
தனித்தமிழ் வேண்டு மன்றோ
தவறாதிம் மலரை
இனித்தமிழ் மொழியென
எழுதுவாராகில் தமிழால்
தனித்தமிழ் நாடு மொழி....
ஏதையம்? மேலும் செய்!
-1948 (?)