இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
230 ☐ கனிச்சாறு - ஏழாம் தொகுதி
198
இறையரசனின் ‘சிந்தனை ஊற்று’ பாடல்
நூலுக்குப் பாராட்டுப்பா!
“சிந்தனைஊற்” றென்னும் சிறுபாடல் நூலெமக்கு
வந்தது(அ)தில் உள்ளம் வளம்பெருக்கி நின்றதென்பேன்!
தூய தமிழ்ச்சொற்கள்! துவளாத நல்லநடை!
ஏய உணர்வெழுப்பும் இன்கருத்துப் பொன்முடிப்பு!
வெண்பாவும் மண்டிலமும் வெஃகும் வியன்சிந்தும்
ஒண்பாமுப் பத்தொன் பதுபாட்டும், பாட்டரங்கில்
ஏறிய பாடல்கள் ஈரிரண்டும் கோத்துத்தேன்
ஊறிய தீம்பலா வின்சுளைகள் ஒத்தனபோல்
பாவிருந் துண்டேன்;பா வல்லோன் இறையரசன்
நாவிருந்தை என்னென்பேன் நான்?
-1985