பக்கம்:கனிச்சாறு 7.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  235

நெருப்பின் நினைவு’களும் ‘நெஞ்சின் நிழல’ சைவும்
நெற்று மணிஎனும்நற் பாடல்கள்! - ஒரு
நிலைத்த தமிழினத்தின் தேடல்கள்! - தமிழ்
விருப்பு மிகவும், இனம் ஏற்ற முறவும் - நிலம்
விடுதலை பெறவும்துணை நின்றிடும்! - இடை
வீழ்ச்சி யின்றிப் பகை வென்றிடும்!

-1986
 


202

வாழ்க நன்றே!

இருபதின் ஐந்தாம் ஆண்டில்
எடுத்தடி வைத்தி ருக்கும்
திருவளர் கவிதை என்னும்
தீந்தமிழ்ப் பாடல் ஏடும்
குருமகன் தெசிணி தாமும்
கூம்புத லின்றி யாண்டும்
மருவுக வளங்கள் ஆக்கம்
மண்டுக! வாழ்க நன்றே!

1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/280&oldid=1447175" இலிருந்து மீள்விக்கப்பட்டது