பக்கம்:கனிச்சாறு 7.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


அறந்தழுவும் மனத்தினராய்
அறநூல்கள் தேடி
ஆய்ந்துகற்றுப் பொருளுணர்ந்தே
அப்பொருளைப் பாட்டில்
பிறந்தபயன் பெற்றிடவும்
பிறருணரத் தந்தார்!
பெருமையுடை நல்லறிஞர்
அருமைவினை செய்வார்!
இறந்தபின்னும் பெரும்புகழும்
ஏற்றமும்பெற் றுய்வார்!
இறையரசன் நற்செயலும்
என்றென்றும் நிற்கும்!
சிறந்தமொழி, இனவுணர்வு,
நாட்டுணர்வு கொண்ட
செம்புலவர் இவர்பெருமைச்
செயல்வாழ்க! வாழ்க!

-1991


212

‘இளமை விடியல்’ - வாழ்த்துப் படையல்!


பெற்றெடுத்து மோந்து
பெயரிட்டுப் பேணிநின்று
கற்றறிந்தார் போற்றுமுயர்
கல்விதந்து - உற்ற தந்தை
போனபின்னும் என்னைப்
புரந்தஅன்னை குஞ்சம்மாள்
வானநினை விற்(கு)இது ஓர்
வாழ்த்து!

-1995
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/289&oldid=1447185" இலிருந்து மீள்விக்கப்பட்டது