பக்கம்:கனிச்சாறு 7.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  15

மாடன்ன கைவண்டி இழுப்பார்! உள்ளே
மனைவியொடு கணவன் அவர் குழவியொன்று
ஓடன்ன கன்னம்!உலர் வயிறுகொண்டே
ஓடிடுவான் வைத்திழுத்துத் திணறும் மூச்சு!
நாடென்ன வென்றால்செந் தமிழ் நாடென்பேன்!
நடையென்ன வென்றால் காட்டிடையில் வாழும்
கேடுசூழ் 'மிருக'நடை என்பேன்! தூய
குறள்பிறந்த நாடேநீ இருள்வாய் என்பேன்!

'இல்'லென்னும் வண்டிதனை இழுக்கச் செய்வார்
என்றென்றும் பெண்டிரெல்லாம் ஆண்கள் தம்மை;
'நில்'லென்றும் 'போ'வென்றும் கூறி ஆட்டும்
நிலையாகக் கையிழுப்பு வண்டி யேறிப்
‘பல்'லெல்லாங் காட்டியே மைக் கண்களாட்டிப்
பாதத்தில் வண்ணத்தோல் குறடு தோயக்
'கொல்'லென்று பிறர்நகைக்கக் கால்மேல் மற்றோர்
கால்போட்டே யிருப்பாரை யிழுப்பார்க் கண்டேன்!

சுட்டெரிக் கின்றவெய்யில் பட்டுப் பட்டுச்
சுருண்டுவிழும் தோல்கருமை நிறத்தை வெல்லும்!
தட்டுத்தடு மாறிவண்டி யிழுத்துச் செல்லும்,
தளர்வுடையார்! வண்டிக்குள் வெளியிற் றொங்கும்
சுட்டுவிரல் நுனியும்வெம் பரிதிகாணாச்
சிவந்திருக்கும் செல்வத்தார் தம்மை ஏற்றி
முட்டிக்கா லொடியும்வகை யிழுத்துச் செல்லும்,
முதுகுவளைந் தாரிருக்கும் கருத்துத் தோன்றும்!

தெட்டுகின்ற மக்களெலாம் நடந்து செல்வார்!
தெருக்களிலே நடப்பவர்கள் வறுமை காண்போர்!
பட்டுடையில் பாதியுடல் மூடிப் பின்னைப்
பகட்டுடையிற் காலுடலை மூடிக் காலை
வெட்டவெளி யோடுவாய்ப் பண்ணும் பெண்டிர்,
வேளைக்கொரு மேற்றுணியும் நாளைக் கெட்டும்
கட்டுகையில் நடந்து செல்லும் வண்டிக்காரன்
கன்னிகளின் வெற்றுடலை வெய்யில் தீய்க்கும்!

இரக்கம் மென்ப துள்ளத்திற் கொள்ளாமக்கள்!
ஏன்வாழ வேண்டுமென் றெண்ணும் மக்கள்!
உறக்கமில தூணுமிலை பொருளைச் சேர்க்கும்!
உயர்மாடிக் காரருக்கே யுள்ளம் மட்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/60&oldid=1441925" இலிருந்து மீள்விக்கப்பட்டது