இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 37
ஊரென்ப தெனக்கில்லை;
ஊர்யாவும் ஊர்தாம்!
உறவென்பார், ‘தமிழ்காக்க
உழைப்போம்’ என் பார்தாம்!
சீரென்ப தெனக்கில்லை;
செந்தமிழ்ச் சீர்தான்!
சிறப்பென்ப தெல்லாமும்
அவள்பெற்ற பேர்தான்!
(தனித்துப்)
பாராட்டு, பழிப்பெல்லாம்
பயன்கொள்வார் கருத்தாம்!
பணியாற்றி உடல் தேய்த்தல்
என்னுயிர் விருப்பாம்!
போராட்டம் அகத்தில்லை;
புறத்துண்டு; தமிழ்தான்
பொய், தாழ்வு, மடம்,யாவும்
போழும் கை வாள்தான்!
(தனித்துப்)
-1973
25
எம் கோள்!
அடிமை அறியாமை உட்பகைமை ஆழ்ந்த
மடிமை பொசுக்கி மணித்தமிழும் நாடும்
குடியும் உயர்த்தலெம் கோள்!
-1973