இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 53
38
வாழும் என் உயிரும் அகமும்!
செந்தமிழை வாழ்த்தித்
திருத்தமிழர் சீர்வாழ்த்தி
என்தமிழ் நாட்டின்
எழில்வாழ்த்தி, முந்தையர்தம்
பேர்வாழ்த்தி, அன்னார்
பெரும்புலமைத் தாள்வாழ்த்தி
ஊர்வாழ்த்தி வாழ்மென்
உயிர்!
வாழ்வுயர்ந்து செந்தமிழ்தான்
வையம் பரவிடவும்,
தாம்விழிவு நீங்கித்
தமிழரினம் வாழ்ந்திடவும்
வீழ்வின்றி நல்லறமே
யாண்டும் விளங்கிடவும்
ஆழ்நினைவால் வாழ்மென்
அகம்!
-1981
39
கொள்கையை ஆற்ற மறப்பேனா?
“சுவரை இடித்துப்பல் வண்ணங் குழைத்தொரு
சித்திரம் தீட்டுவதா? - உள்ள,
துவரை விதையினைத் தொலைத்துப் பருப்புக்குத்
துன்புற் றலைகுவதோ?
அவரை விதைத்தொரு பந்தலை நாட்டாமல்
அண்ணாந்து பார்ப்பதுவோ? - அட,
எவரை நினைத்துளம் கசங்கியிவ் வாறொரு
ஏதம் நினைத்து விட்டீர்!”