பக்கம்:கனியமுது.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

வானிற் பறக்கையிலும் வற்றாச் சுறுசுறுப்பாய்த்
தேனின் இனியாளின் சிந்தை கவர்ந்திட்டான்
சீமான் மகனொருவன்; செல்வத்தின் மேற்புரண்டும்
சாமான்ய மாகச் சகியின் மனம்புகுந்தான்!

மீண்டும் புதுவாழ்வு மேவியது மங்கைக்கு!
தூண்டிடும் அன்பால் துவங்கினாள் இல்லறத்தை!
சொத்து மிகவுண்டு; சுகந்தானே தேவையெனச்-
சத்தான காதலிலே சார்ந்திருக்க முந்தினாள்.

ஆடலும், பாடலும், ஆரவா ரத்தோடு
கூடலும், கும்மாளம் போடலும், கோலமுடன்
ஒப்பனை செய்தே உலகம் பின்பற்றச்

செப்பனிட்டாள் வாழ்வைத் திருப்திதான் பெற்றாளோ?


113

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/124&oldid=1380264" இலிருந்து மீள்விக்கப்பட்டது