பக்கம்:கனியமுது.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


எம்பசுவுக் கீடில்லை என்றே மகிழ்ந்தவனைக்
கொம்பினால் குத்திக் கொலையில் முடித்திடவே
அய்யகோ!! மீண்டும் அருவியாய்க் கண்ணீரைப்

பெய்தனளே; யாதொன்றும் செய்வ தறியாளே!
கைம்மைநிலை யுற்றாளைக் கண்டு, வழக்கறிஞர்
கைம்முதல் கோடி கணவன் வீடுத்ததெனத்
தந்து திரும்பினார்; சிந்தைமிக நொந்தனளே!


வந்து வந்து வெள்ளமாய் வற்றாமல் சேர்கின்ற
செல்வத்தால் யாது பயன்? சீரழிந்து போனபின்னே.
நல்வழியில் வந்ததன்றே நாதர் இருவரையும்
வாரிக் கொடுத்திட்டு வாழ்வை இழந்திட்டேன்
கூரிய கண்ணை விற்றுக் கோடிபொன் வாங்கியென்ன

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/128&oldid=1380226" இலிருந்து மீள்விக்கப்பட்டது