இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆனந்தம் கவிதைகள்
கேட்ட நிபுணருமே கீழே மயங்கிவிழப்-
பாட்டாளி ஆடையிற் பண்டைய ஆள்வந்தான்!
உந்துவண்டி ஏற்றிமுன் ஊர்சுற்றி வந்தானே-
முந்திப் படமெடுக்க முன் வந்து தோற்றானே-
அன்னோன் வளங்குன்றி ஆளாய்ப் பணிபுரிந்தான்!
"முன்னாளில் நம்மை முதன்முதலாய்க் காதலித்தோன்
வாழ்வு நலம் கெட்டு வறுமையில் வாடுகின்றான்,
வாழ்வளிக்க வல்லான் வளரா எளிமையினால்
என்றுந் துணையிருப்பான், இன்பந் தனிமையுடன்
குன்றாதென் றெண்ணிக் குறித்தாள் கணவனாக!
ஆண்டுகள் சிற்சில ஆயின மேன்மையாக!
தீண்டுங்கால் மெய்க்கின்பஞ் சேர்க்கும் மழலைகள்
மூன்று பிறந்தன; மோகம் குறையவில்லை!
ஈன்றவள் நெஞ்சறிந்தே ஏழை உழவனாய்
ஏர்முனையிற் பாடுபட்டான், ஏற்றமுடன் வாழ்ந்தானே
129