பக்கம்:கனியமுது.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


ஓர்நாள் அவன் வீட்டோர வயலில்
இயந்திரக் கலப்பை கொண்டு உழுதிட்டபோது
பீறிட்டுக் கிளம்பிற்று எண்ணெய் ஆறாக!
எண்ணெய்! எண்ணெய் என்று எக்களிப்புடனே
துள்ளிக் குதித்தவனாய் கூவிடவே
மாது, வந்தது புதிய ஆபத்து என்று
திடுக்கிட்டுப் போனாள் விழியில் நீர்சோர
எண்ணெய் கிடைத்திடுது நம்வயலில்
எண்ணெய் தங்கமதைத் திரட்டியே தருமே
செல்வம் மிகுந்திடுமே மனைமாட்சி அறுமே
மீண்டும் கருப்புடையோ! கண்ணீரோ என்று
மாதவளும் பல எண்ணி மருண்டு கிடந்திட்டாள்

130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/141&oldid=1380180" இலிருந்து மீள்விக்கப்பட்டது