பக்கம்:கனியமுது.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


அண்டை வயலிருப்போர் அக்கணமே வந்து
அறியாது எமது எண்ணெய்க் குழாயினையே
பழுதாக்கிப் போட்டாயே! பார் எண்ணெய் வெள்ளம்
எனப் பதறிக்கூறினர், பாவை மனமகிழ்ந்தாளே!

எண்ணெய் நமதல்ல! செல்வம் குவிந்து பெருகாது
ஆகவே ஆபத்து நமக்கில்லை அதனால்
இல்லற வாழ்வுக்கு இடையூறு இல்லை
இனிதாக வாழ்ந்திடலாம் ஏற்றவருடனே
என்றெண்ணிப் பூரித்தாள் ஏந்திழையாள்
பலதோல்விக்குப் பிறகு வாழ்வில்
இன்பம் பெற்றிட்டாள்-

132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/143&oldid=1380166" இலிருந்து மீள்விக்கப்பட்டது