இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
அங்கொருபெண் நடைபாதை மரத்தின் கீழே
அமர்ந்திருந்தாள்; வயது பதி னெட்டி ருக்கும்.
தங்கங்கர் மேனியெங்கும் தணலால் வெங்த
தழும்புகள் போல் தோன்றிடவே அருகிற் சென்றோம்,
அங்கமெலாங் குறைந்தழுகுங் தொழுநோய், அந்தோ!!
ஆடையினால் போர்த்திடவே முயலு கின்றாள்;
எங்களையுங் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே
இளங்கையும் புரிகின்றாள்! அவளேக் காட்டி-
“இவளுங்தான் பெண்பிறவி! யாருக்காக
இவளிங்கே வாழ்கின்றாள், பயனில் லாமல்?
இவளைப்போய் ஆணொருவன் மனைவி யாக்கி,
இல்வாழ்வு துய்ப்பதற்கா வரப்போ கின்ருன்?
இவளையெலாம் பார்த்துவிட்டுத் திரு மணத்தில்
எவ்வாறு நாட்டமெழும்? நட நீ!” என்றான்.
“தவறப்பா நீ சொல்லுங் தத்து வந்தான்;
தப்பாமல் இவளுக்கும் ஒருவன் எங்கோ
10