பக்கம்:கனியமுது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


வந்திருந்தோர் பரபரப்பாய் ஒடிச் சென்று,
வசைபாடும் மாமியவள் இசைநிறுத்தி,
வெந்திருக்கும் மூத்தவளின் நெஞ்சில் இன்னும்
வேல்பாய்ச்சி விளையாடும் விந்தை கண்டு
வந்தவழி மீண்டனரே! உலக நாதர்--
வாய்ப்புகையை வெளிவிட்டுப் பேச லானார் :
“இந்தபெருந் தாய்ச்சனியன் இருக்கு மட்டும்,
இனியெந்தப் பெண்வருவாள் நம்வீட் டுக்கே


பொங்கிவரும் செங்குருதி, கண்ணீ ரோடு
போட்டியிட்டுப் பெருகிவரக் கண்ட பிள்ளை,
தங்குதடை மீறி, அவள் தலையைத் தாங்கித்,
தன்மடியில் வைத்து,முதல் உதவி செய்தான்
“சங்கடங்கள் தீர்வதற்கும், அம்மா வுக்குச்
சரியான ஒருபாடம் தருவ தற்கும்,
இங்கிவளை மணந்திடுவேன்!” என்றான். தந்தை,
எதிர்ப்பின்றிச் சுருட்டொன்றைப் பற்ற வைத்த

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/31&oldid=1380085" இலிருந்து மீள்விக்கப்பட்டது