பக்கம்:கனியமுது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




காரணந்தான் என்னேடி, தோழி! நானுங்
கற்றவித்தை எல்லாமே காட்டி விட்டேன்!
பூரணமாய் அழகுதரும் சாத னங்கள்
புதுமையாகக் கிடைத்தவற்றை வாங்கி வங்தேன்!
தோரணங்கள் எழில்கூட்டும் பந்த லைப்போல்,
தொகைதொகையாய் அலங்காரம் செய்து கொண்டேன்!
சீரணிகள் யாவையுமே அணிந்து தீர்த்தேன்;
சீந்திடுவார் எவரையுமே காண வில்லை!


கண்ணாடி போற்பருவம் முழுதுங் காட்டும்
கவின்நிறைங்த சல்லாவை உடலில் போர்த்திப்,
புண்ணுக்கும் வேல்விழிக்கு மையுங் திட்டிப்,
பூவிதழ்போல் உதட்டுக்குச் சாயம் இட்டுப்,
பிண்ணாக்கு நிறம்மாற்ற மாவைப் பூசிப்,
பின்னழகு மறைக்காத கச்ச ணிந்து,
மண்ணாளும் அரசிபோலக் கைகள் வீசி,
மதர்ப்பாக நடக்கின்றேன். பார்ப்போ ரில்லை!

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/36&oldid=1380150" இலிருந்து மீள்விக்கப்பட்டது