பக்கம்:கனியமுது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இளங்கிளி என்னும் பேரை
இயல்புடன் இட்டார் பெற்றோர்.
பளிங்கினால் இழைத்த சிற்பப்
பாவையாய்த் திகழும் அங்கம்.
களங்கமே துளியும் இல்லாக்
கவின் நிறை மதிபோல் தோற்றம்
விளங்கிட, இளைஞர் நெஞ்சம்
விழுங்கிடும் எழிலைக் கொண்டாள்!

காலையில் எழுந்த பின்னர்--
கல்லூரி செல்வ தற்குள்
சேலையில் நான்கு மாற்றிச்,
சிறகிலாக் கச்ச ணரிந்து,
வேலையும் வெல்லுங் கூர்மை
விழிகளில் மையுங் தீட்டிச்,
சாலையில் நடந்து சென்றால்...
சதிராட்டம் இளைஞர் காண்பர்!

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/38&oldid=1380177" இலிருந்து மீள்விக்கப்பட்டது