இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
எதிர்ப்புற மாக வந்தும்,
‘மணி என்ன?’ என்று கேட்டும்,
பதில்பெறா விடினுங் கூடப்
பணிவுடன் வணக்கஞ் செய்தும்,
மதிப்புள உடையு டுத்தி
மார்பினை நிமிர்த்திக் காட்டிக்
கொதிப்புறும் உள்ளங் கொண்டு
கூட்டமாய்ப் பின்னே செல்வார்!
யாரையுங் துச்ச மாக
எண்ணினாள் இதுவ ரைக்கும்:
பாரையே ஆளத் தக்க
பட்டத்திற் குரிய ளேனும்
கூரையில் லாத வீடாம்
கொழுநனே நாடா வாழ்க்கை!
“யாரைத்தான் தேர்ந்தெ டுப்பாள்?”
என்றேங்கி நின்றார் பல்லோர்!
28