பக்கம்:கனியமுது.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


தீண்டிட அருகிற் செல்வாள்;

திடுக்குற்று விலகி நின்று

வேண்டுவார், பயிலும் போது

விளையாட்டு கூடா தென்று!

"மாண்டிட எனைவ தைக்க

மணந்தது குற்றம்!” என்பாள்;

"ஆண்டினிற் சிறிய உன்னை

அழைத்தும் யானோ" என்பார்.


'என்னுடன் பேசில் இன்பம்

என்விழி பருகின் சொர்க்கம்

பொன்னுடல் தன்னைத் தொட்டால்

பூலோகம் ஈடாம் என்ற

மன்னவர் பலர்இ ருந்தார்!

மதியிழந் தும்மைத் தேர்ந்தேன்!

இன்னுமேன் உயிர்வாழ் கின்றேன் ?'

என்றொரு முடங்கல் தீட்டித்

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/42&oldid=1380071" இலிருந்து மீள்விக்கப்பட்டது