பக்கம்:கனியமுது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


முருகவேள் பட்டம் பெற்று,
மொழியியல் வல்லா னாகிப்,
பெருகவோர் அலுவல் தேடிப்,
பிறர்மெச்சும் வாழ்வு நேர
உருகிடும் கண்ணன் விட்டே
ர் மாறி வந்து சேர்ந்தான்!
கருகிய பயிராய் நண்பன்
கலங்கினான் கண்ணீர் சிந்தி!


கனிமொழி என்னும் பேரைக்
காரணப் பெயராய்த் தாங்கி,
இனிமையும் எழிலும் கூடி
இளமையிற் கொலுவிருந்தும்
தனிமையைத் தீர்க்கொ ணாது,
தந்தைக்குக் கவலை யாகிப்
பனிமலர் ஒன்று வாடும்

பான்மையைக் கண்ட சுற்றம்-

43

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/54&oldid=1459284" இலிருந்து மீள்விக்கப்பட்டது