பக்கம்:கனியமுது.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


இருமனம் ஒருங்கி ணைத்தே
எழில்மணம் பரப்பும் நல்ல
திருமணம் இருவ ருக்கும்
தேர்ந்தனர்! ஓலை பெற்றும்
வருமாறு புரியா னாகி
வருந்தினன் கண்ணன் தானும்;
திருமணத் தன்றைக் குத்தான்
தேர்வுநாள் ஆன தாலே!


உயிர்க்குயி ரான தோழன்
வரவொண்ணா நிலைமை ஓர்ந்து
செயிர்த்தனன் முருக வேளும்!
சிலையெனுந் துணையி டத்தே
அயர்வினை உரைத்தான்! அன்னாள்,
அவளருங் கொழுநன் நட்பைப்
பயிர்ப்புடன் உணர்ந்து கொண்டாள்;

பழகிய நெருக்கம் கண்டாள்!

44

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/55&oldid=1459285" இலிருந்து மீள்விக்கப்பட்டது