இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கனியமுது
இருமனம் ஒருங்கி ணைத்தே
எழில்மணம் பரப்பும் நல்ல
திருமணம் இருவ ருக்கும்
தேர்ந்தனர்! ஓலை பெற்றும்
வருமாறு புரியா னாகி
வருந்தினன் கண்ணன் தானும்;
திருமணத் தன்றைக் குத்தான்
தேர்வுநாள் ஆன தாலே!
உயிர்க்குயி ரான தோழன்
வரவொண்ணா நிலைமை ஓர்ந்து
செயிர்த்தனன் முருக வேளும்!
சிலையெனுந் துணையி டத்தே
அயர்வினை உரைத்தான்! அன்னாள்,
அவளருங் கொழுநன் நட்பைப்
பயிர்ப்புடன் உணர்ந்து கொண்டாள்;
44
44