பக்கம்:கனியமுது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


“மார்கழிப் பறங்கிப் பூவை
வாயிற்கோ லத்தில் வைப்பார் ;
கூர்கொளும் வாழைப் பூவைக்
குழம்பாக்கி இலையில் வைப்பார் ;
சீர்கொளும் முல்லைப் பூவைச்
சிறந்திடக் குழலில் வைப்பார் :
தூர்கொளும் எருக்கம் பூவைச்
சுடுகாட்டில் அன்றோ வைப்பார் !



நண்பரிற் கூட இந்த
நால்வகை உண்டே, அத்தான்@
திண்ணையில் அம்ர்ந்து செல்வோர்;
தெருவோடு பேசிச் செல்வோர் :
உண்ணவும் இட்டு வந்தால்
உட்கார்ந்து தின்று செல்வோர் :
பெண்ணோடு துயிலும் இன்பப்
பேழைக்கும் வந்து செல்வோர் !

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/60&oldid=1380332" இலிருந்து மீள்விக்கப்பட்டது