பக்கம்:கனியமுது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


என்னவோ பொறுப்பில் லாமல்
எப்போதோ சொன்ன சொல்லை
இன்னமும் நினைவில் கொண்டே
நிறைவேற்ற இங்கு வந்த
கண்ணனோ நண்ப ருக்குள்
கடையனாம் , கயவ னாவான் !
கன்னியர் கற்பின் மேன்மை
கருதாத மூடன்!” என்றாள்.



“நம்பிக்கை மோசம் செய்த
நயவஞ்சக் கள்வன், நட்பாம்
செம்பொன்னைக் கரியாய் எண்ணும்
சீர்கெட்ட கீழோன் தன்னை
வெம்பகை யாக்கி விட்டேன் !
விடுவேனோ ?” என்றெ ழுந்தான்,
தம்பியோ கம்பி நீட்டித்
தப்பினான் : உயிர்பி ழைத்தான் !

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/61&oldid=1380210" இலிருந்து மீள்விக்கப்பட்டது