பக்கம்:கனியமுது.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரிசியிலே கல்பொறுக்கிக் கொண்டிருந்தேன் ;
அடுத்தவீட்டுச் செங்கமலம் உள்ளே வந்தாள்,
வரிசையான செம்பற்கள் வெளியே தோன்ற!
“வாடியம்மா ?” என்றழைத்தேன் வாடிக் கைதான். கரிசனமாய்க் கையிலுள்ள முறத்தை வாங்கிக்
“கல்லுக்கும் அரிசிக்கும் வேறு பாடே
சரியாகப் புரிவதில்லை இப்போ தெல்லாம் :
சரிதானா அக்கா, நான் சொல்வ?” தென்றாள்.


“இப்படியே மனிதரிலும் இருக்கின் றார்கள்
யாரென்ப தறிவாயா?” என்று கேட்டேன் ;
அப்படியே தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கி
அங்கமெலாம் குன்றிப்போய்க் குறுகிவிட்டாள்.
“எப்படி நீ தெருவிலுள்ள வீட்டார்க் கெல்லாம்
என்வீட்டில் இருவருக்கும் சண்டை என்று
செப்பிவந்தாய்? இவைதாம் நீ எமக்குச் செய்யும்
சிறப்பான உதவிகளோ ? உண்மை என்ன:-

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/68&oldid=1380285" இலிருந்து மீள்விக்கப்பட்டது